Thursday 17 July 2014

தொலைவிலிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் கரங்களைப் பற்றிக்கொள்ள உதவும் உபகரணம்!(படங்கள் மற்றும் காணொளி)


ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு ‘ஸ்கைப்’ போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது இருந்தது.

இந்நிலையில் நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘பிரெப்பிள்ஸ்’ என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளனர்.



கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.

தூர இடங்களில் இருக்கும் காதலர்கள் தம்மிடமுள்ள ‘பிரெப்பிள்ஸ்’ உபகரணத்தைப் பயன்படுத்தி கரத்தைப் பற்றும் உணர்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும்.

கீழே காணொளி பாருங்கள்:



இந்த உபகரணத்தை ஸ்கைப் Facetime, மற்றும் பிரேப்பில் ஆப்ஸ் போன்றவற்றுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.


மேற்படி ஒரு ஜோடி உபகரணங்களின் ஆகக்குறைந்த விலை 89 அமெரிக்க டொலராகும்.
Read more ...

வைரஸில் இருந்து கம்பியூட்டரை காப்பாற்ற....!



இன்றைக்கு கம்பியூட்டரில் நாம் ஏதாவது ஒரு பைலை டவுண்லோட் செய்கையில் அதனோடு சேர்த்து வைரஸூம் வந்துவிடுகின்றது எனலாம். கம்பியூட்டரில் ஆன்ட்டி வைரஸ் மட்டும் நாம் போடவில்லை எனில் இன்றைக்கு நமது கம்பியூட்டர்கள் மூழுவதும் வைரஸ்களால் நிரம்பிவிடும். இதோ கம்பியூட்டர் வைர்ஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில் எளிய வழிகளை இங்கு காணலாம்.

உங்களுடைய கம்ப்யூட்டரை இன்டர்நெட் இணைப்பிலிருந்து நீக்கவும். கம்ப்யூட்டரை சுத்தப் படுத்த நீங்கள் தயாராகும்வரை இன்டர்நெட் இணைப்பினைத் தர வேண்டாம். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர், பரவுவதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதனையும் தடுக்கலாம். உங்களுடைய கம்ப்யூட்டரில் மால்வேர் இருப்பதாக உணர்ந்தால், சேப் மோடில் பூட் செய்திடவும். இதற்கு கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின்னர் எப்8 கீயின் இடம் அறியவும். பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, திரையில் ஏதேனும் தென்பட்டவுடன், எப்8 கீயினைத் தட்டிக் கொண்டே இருக்கவும். இதனால், Advanced Boot Options என்ற மெனு கிடைக்கும். அதில் Safe Mode with Networking என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். சேப் மோடில் உங்கள் கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் சற்று வேகமாக இயங்கு வதனைக் காணலாம். அவ்வாறு இயங்கி னால், மால்வேர் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது.

சேப் மோடில் இருந்தபடி, வைரஸ் ஸ்கேன் செய்திட நீங்கள் விரும்பலாம். அதற்கு முன்னர், தற்காலிக பைல்களை நீக்கவும். இதனால், டிஸ்க் இடம் சற்று கூடுதலாகக் கிடைக்கும்; வைரஸ் ஸ்கேனிங் வேகமாக நடைபெறும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup Utility என்பதைப் பயன்படுத்த, Start, All Programs (or just Programs), Accessories, System Tools, Disk Cleanu எனச் செல்லவும். உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்து வைத்திருந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாக, Malwarebytes Anti-Malware மால்வேர் ஸ்கேனிங் அல்லது எதிர்ப்பு புரோகிராமினை இயக்கவும். இதற்காக, இணையத்திலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். லட்சக் கணக்கில் மால்வேர் புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் இருப்பதால், எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்கள் அவை அனைத்தையும் நீக்கும் என எண்ண வேண்டாம். நாம் எப்போது நாமாக இயக்குகிறோமோ, அப்போது இயங்கத் தொடங்கி, மால்வேர்களை அழிக்கும் புரோகிராம்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும். அதனை அடுத்து, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

இங்கே கிளிக் செய்து பல வைரஸ் நீக்கிகளை இலவசமாக தரவிறக்கி பயன்படுத்துங்கள். 

மேலும் வைரஸ் பிரச்சனை இருந்தால் படங்களுடன் எங்கள் முகநூல் குழுமத்தில் பதிவிடுங்கள்.
Read more ...

Wednesday 4 June 2014

பென்டிரைவ்/மெமரி கார்டில் வைரஸ் - ஆண்டி-வைரஸ் மென்பொருள் இல்லாமல் நீக்கலாம்.


இன்றைய தொழில்நுட்ப உலகில் பெண் டிரைவ் தினந்தோறும் நமக்கு அதிகம் பயன்படுகிறது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு பைகளை நகல் எடுத்து கொண்டுசெல்ல முன்பு ஃபிளாப்பி, சிடி/டி‌வி‌டி இருந்தது ஆனால் இதன் கொள்ளளவு மிகவும் கம்மி. பெண் டிரைவ் கொள்ளவு அதிகம், மேலும் எளிதாக கையில் எடுத்து செல்லலாம். மிக வேகமாக நகல் எடுக்கலாம் என பெண் டிரைவ் வசதிகள் ஏராளமாக இருந்தாலும் பெண் டிரைவுக்கு என்று பிரச்சனைகளும் நியைவே இருக்கிறது. 

பெண் டிரைவை பிரவுசிங் சென்டர் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்தும் போது எளிதாக வைரஸ் புகுந்துவிடுகிறது. பெண் வைரஸ்கள் பல வகை உண்டு, பெரும்பாலான வைரஸ் பெண் டிரைவில் உள்ள பைல்களை மறைத்து ஷார்ட்கட் (Shortcut) பைல்களை மட்டும் காண்பிக்கும், மேலும் சில பெண் டிரைவில் சில வகையான பைகளை அழித்துவிடும், சில வைரஸ் படங்களை (Images) எக்ஸிகியூட்டபிள் பைலாக மாற்றிவிடும். இதை தவிர்த்து பெண்டிரைவில் Write Protected பிழை தோன்றும். 

இந்த பதிவில் பெண் டிரைவ் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் அதை தீர்க்கும் வழிமுறைகளையும் ஒவ்வொன்றாக பாக்கபோகிறோம். 

இன்று முதலில் நாம் பார்க்கபோவது ஷார்ட்கட் வைரஸ் பாதிக்கப்பட்டால் எப்படி எளிதாக பெண்டிரைவில் உள்ள பைல்களை மீட்பது என பார்க்காலாம். 

இதற்கு பழைய டாஸ் (MS DOS) கமாண்ட் தெரிந்தாலே போதும். 

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 



ஒரு லைக் போடுங்க ப்ரண்ட்ஸ்:

நன்றி: தொழில்நுட்ப தகவல்கள்
Read more ...

Tuesday 3 June 2014

லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய வழிகள்


லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் : நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.
லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம். அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.

ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.
பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.

பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும். எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது. அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.

ஒரு லைக் போடுங்க ப்ரண்ட்ஸ்:

நன்றி: இன்று ஒரு தகவல். 
Read more ...

கூகுள் வழங்கும் வைஃபை கேமரா... நமக்கு என்ன பயன் ?



இன்டர்நெட் உலகில் பலவேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, வலைதள தேடல்களில் முதலிடத்தில் உள்ளது கூகுள் நிறுவனம். வலைதளங்களை பயன்படுத்துவோரில் சுமார் 80 சதவீதம் பேருக்கு கூகுள் இணையத்தில் கணக்குகள் உள்ளது. மேலும் பிற சமூக வலைதளங்களில் நுழைவதற்கும் இந்த கூகுள் கணக்கு பயன்படுத்தும் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வலைதளங்களில் கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து மக்கள் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் தயாரிக்கும் பணியை தொடங்கியது.அதிலும் செல்போன், டேப்லெட் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் கூகுள் கிளாசை அறிமுகப்படுத்தியது. தற்போது டிரைவர் இல்லாமல் இயங்கும் காரை தயாரிக்கும் பணியில் அதிக கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம், மற்றொரு புதிய கண்டுபிடிப்பான வைஃபை கேமராவை அறிமுகப்படுத்தவுள்ளது.


அதாவது வைஃபை மூலம் இயங்கும் கேமரா. இந்த கேமராவை வீடு அல்லது அலுவலகத்தில் பொருத்தி, அதை வைஃபையுடன் இணைத்துவிடவேண்டும். பின்னர் நாம் தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். காரணம் வைஃபையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கேமரா குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை அது பொருத்தப்பட்டுள்ள இடத்தை புகைப்படம் எடுத்து நமது ஸ்மார்ட் போனிற்கு அனுப்பிவிடும்.ஏற்கனவே வைபையில் இயங்கும் கேமராக்கள் சந்தையில் இருந்தாலும், கூகுள் நிறுவனம் தயாரிப்பில் பல தனித்தன்மைகளும் உள்ளது. இதன்மூலம் . வீட்டில் தீவிபத்து அல்லது மற்ற அசம்பாவிதங்கள் ஏதுவும் நேர்ந்தால் இந்த கேமராவில் உள்ள ஒரு சென்சார் கருவி புகைப்படத்துடன், அபாயத்தை தெரிவிக்கும் ஒருவித சங்கேத ஒலியையும் உங்களது ஸ்மார்ட் போனிற்கு அனுப்பும்.இதன் மூலம் வெகு தொலைவில் இருந்தால் கூட வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் இன்னும் வெளியிடாவிட்டாலும், இந்த தயாரிப்புக்கு சிறிய நிறுவனங்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் கால்பதிக்காத எலக்ட்ரானிக் பொருட்களே இருக்காது என்று கூறலாம்.


ஒரு லைக் போடுங்க ப்ரண்ட்ஸ்:

நன்றி: இன்று ஒரு தகவல். 
Read more ...

Wednesday 28 May 2014

அழிக்கப்பட்ட பைல்களை மீட்க ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் எல்லாமே சாத்தியாம்தான் என நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. 

நேற்று வரை கணினியில் செயல்படுத்திய அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் இப்போது ஒரு கைபேசியில் வந்துவிட்டது. கணினியில்  விண்டோஸ் 95 வெளி வந்த பிறகு ரீசைக்கிள் பின் (Recycle Bin) முக்கியத்துவம் நாம் அறியாதது அல்ல. 

இப்ப இந்த வசதி ஆண்ட்ராய்ட் மொபைலிலும் பயன்படுத்த நிறைய ஆப்ஸ் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கிறது, அவற்றில் பிரம்பலமானது Dumpster – Recycle Bin. இது ஆண்ட்ராய்ட் மொபைல்க்கு என பிரத்தியோகமாக உள்ள அப்ளிகேஷன்தான். 

இதை நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நிறுவியதும், கணினியில் உள்ளது போலவே ரீசைக்கிள் பின் செயல்படும். 

இதன் சிறப்பியல்புகளை பார்க்கலாம். 

இதன் மூலம் தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ அழிக்கப்பட்ட கோப்புகளை, படங்களை, ஆடியோ, வீடியோ பைல்களை மீட்டெடுக்கலாம். 

அழிக்கப்ப்ட்ட பைல்களை படங்களோடு பார்வை இடலாம்.

இந்த ரீசைக்கிள் பின் பார்க்க தனியாக லாக்கிங்க் வசதி இருக்கிறது. 

இந்த ஆப்ஸ்க்கு நெட் இணைப்பு இருக்கவேண்டும் அவசியம் இல்லை.   

இதனை உங்கள் மொபைலில் தரவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster



நன்றி:
http://www.amarkkalam.net
உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் களம்.

Read more ...

Sunday 25 May 2014

மெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


மெமரி கார்ட்” இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க… இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட்.
முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக டேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம். காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு, திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது.

காலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.

மெமரி கார்டின் வகைகள்:

எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1. SDSC (Standard Capacity)
2. SDXC (The extended Capacity)
3. SDHC (The High Capacity)
4. SDIO

SD CARD என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன.
SDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.

மெமரி கார்டின் அளவுகள்:

பொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் . அவை.

1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)
2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)
3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)

எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர்.
எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும். காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும். இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும்.

அனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது. CPRM என்பதின் விரிவு Content Protection for Rஊcordable Media என்பதாகும்.

SD கார்டின் சிறப்பு;

இதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான். ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும். இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.
பிராண்டட் SDcards ஒருசில…

Sasmung microSD card
Sandisk Ultra microSD card
Transcend microSD card
Sandisk mobile ultra
Toshiba microSD card
Sony microSD card

இதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் microSD Card கள் உள்ளன.

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?

(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்

மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 – 6MB per second
Class 8 – 8MB per second
Class 10 – 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது.


நன்றி: முகநூல். 
Read more ...
Copy Right Resevered @ technews.com